News Just In

7/19/2021 11:11:00 AM

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதி அறிவிக்கப்பட்டது...!!


நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்று நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த வருடத்திற்கான பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு குறித்த புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: