காணொளி - https://youtu.be/gc5puw0-6w4
பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இதனையடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் பகுதியிலும், பட்டிருப்பு தொகுதியிலும், செங்கலடியிலும் இன்று காலை 10.00 மணிக்கு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு, பட்டாசு கொழுத்தி பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: