அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவிற்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கும் தங்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை புறக்கணித்து பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.
இதுவரையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விடயங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வந்த நிலையில், எதிர்காலத்தில் அரசியல் தீர்வு விடயத்தையும் முதன்மைப்படுத்த எண்ணி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்காவின் தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் உடன், அமெரிக்க தூதரகத்தின் அரசியல்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துக் கொண்டிருந்தனர்.
No comments: