News Just In

7/15/2021 09:10:00 PM

மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு...!!


 (வரதன்)
மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக எண்ணெய் காப்பு 15 ஜூலை வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மகா கும்பாபிஷேகம் 16 ஜூலை வெள்ளிக்கிழமை காலை 8.15 மணி முதல் 10.08 மணி வரை நடைபெறும். 

கும்பாபிஷேக கிரியா கால நிகழ்வுகள்
ஆனித் திங்கள் 31 ஆம் நாள் 15 ஜூலை 2021 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் விஷ்வக்ஷேன விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், தைலாப்பியங்கம், தொடர்ந்து பக்தர்கள் எண்நெய்க்காப்பு சாத்துதல் இடம்பெறும். விஷேட சந்தி, நித்திய துவஜ பூஜை, யாகசாலை பிரவேசம், யாகபூஜை, ஹோம வழிபாடு, சகஸ்ரநாம பாராயணம், பஞ்சசூக்த பாராயணம், திரவிய ஹோமம், விஷேட பூஜை, பஞ்சமுக அர்ச்சனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், விபூதி பிரசாதம் வழங்கல். (காலை 7.00 மணி முதல் மாலை 4.00மணி வரை பக்தர்கள் எண்நெய்க்காப்பு சாத்துதல் இடம்பெறும்.

ஆனித் திங்கள் 32ம் நாள் 16 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் விஷ்வக்ஷேன விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், மஹா யாக பூஜை, ஹோம வழிபாடு சர்வ மங்கல வாத்தியங்கள் முழங்க பிரதான கும்பங்களை வீதி பிரதட்சணம், 8. 15 மணி முதல் 10.08 மணி வரை உள்ள சிம்ம லக்கினமும் அத்த நட்சத்திரமும் அமிர்த சித்தயோகம் கூடிய சுபமுகூர்த்த வேளையில் தூபி அபிஷேகம் தொடர்ந்து ஆஞ்சநேய பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். கர்ப்பாவரண அபிஷேகம், தசமங்கல பூஜை திருமுறை ஓதி திருக்கதவம் திறத்தல், தச தரிசனம் ஆசியுரை, மஹா அபிஷேகம், விஷேட பூஜை, விபூதிப் பிரசாதம் வழங்கல். மாலை 6.00 மணிக்கு மூலஸ்தான பூஜை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று அஞ்சநேய பெருமான் வீதியுலா வருவார்







No comments: