
கபில சந்திரசேனவின் மரணத்தில் யாரும் எதிர்பார்க்காத சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அதிகம் வீரியம் கொண்ட இரசாயனம் அவரின் உடலுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஐஓடிபிபி என்ற புலனாய்வு இணையத்தளம், பெயர் குறிப்பிட விரும்பாத விசாரணை அதிகாரியின் இரகசிய தகவல்களை கொண்டு இது தொடர்பான விடயங்களை தனது ஆய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலோனியம்-210 எனப்படும் இந்த அதிவீரிய இரசாயனப் பொருள் ஒரு வகையான விஷமாகும் (Polonium-210). இதில் மிக அதிகமான கதிர்வீச்சுத் தன்மை காணப்படுவதால் இதனால் ஏற்படும் அழிவு மிகவும் பயங்கரமானது.
2006ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வாழ்ந்த ரஷ்யாவின் உளவுத்துறையில் பணியாற்றிய அலெக்சாண்டர் லிட்வினென்கோ. 2006 இல் அவரைப் பார்ப்பதற்கு இவரது நண்பர்கள் இருவர் வருகிறார்கள்.
அந்த நண்பர்கள் இருவரும் சென்ற பின்னர் இவர் கடுமையான நோய்வாய்ப்படுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் திடீரென மரணமடைகிறார்.
இறுதியில் இது குறித்து ஒரு விசாரணை நடத்தப்பட்டது.பின்னர் அவருக்கு போலோனியம் 210 வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, இலங்கைக்கும் பொலோனியம் கொண்டு வரப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2020 ஜூன் மாதம் சுதந்திரச் சதுக்கத்திற்கு அருகில் ரஜீவ் ஜயவீர என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ரஜீவ் ஜயவீரவுக்கு பொலோனியம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு உடலைக் கொண்டு வந்து அங்கேயே வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஏன் ரஜீவ் ஜயவீரவைக் கொலை செய்தார்கள்? அவரும் ஸ்ரீலங்கன் எயார் பஸ் (விமான) கொடுக்கல் வாங்கலில் முக்கிய சாட்சியாளராக இருந்தார். கபில சந்திரசேனவுக்கும் இந்த பொலோனியத்தைக் கொடுத்துத்தான் கொலை செய்துள்ளார்கள்.

சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையானது விசாரணை அதிகாரிகளுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த பொலோனியம்-210 எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் விஷத்தின் ஆபத்தான தன்மை என்னவென்றால், ஒருவருக்கு இதய நோய் இருந்தால் அவர் மாரடைப்பால் இறந்தது போலவே தோன்றும்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர் பக்கவாதத்தால் இறந்தது போல் தோன்றும். நீரிழிவு இருந்தால் அவர் நீரிழிவு கோமா நிலையினால் இறந்தது போல் தோன்றும். இதுவே இதன் கொடூரமான தன்மையாகும். ஏனெனில் துப்பாக்கியால் சுட்டால் காயம் இருக்கும் சுட்டது தெரியும் மக்கள் பார்ப்பார்கள்.
ஆனால் இதில் மரணம் வெளியே தெரியாது என்பதால் துப்பாக்கியால் சுட்டுத்தான் இறந்தார் என்பதைக் காட்டுவதற்காகவே ரஜீவ் ஜயவீரவின் உடலை அங்கே கொண்டு வந்து போட்டுவிட்டு சுட்டுள்ளார்கள். ஆனால் உயிரோடு அல்ல, உயிரிழந்த ரஜீவ் ஜயவீரவின் சடலமே அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சம்பவமே கபிலவின் மரணத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகம் வீரியம் கொண்ட இரசாயனம் அவரின் உடலுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஐஓடிபிபி என்ற புலனாய்வு இணையத்தளம், பெயர் குறிப்பிட விரும்பாத விசாரணை அதிகாரியின் இரகசிய தகவல்களை கொண்டு இது தொடர்பான விடயங்களை தனது ஆய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலோனியம்-210 எனப்படும் இந்த அதிவீரிய இரசாயனப் பொருள் ஒரு வகையான விஷமாகும் (Polonium-210). இதில் மிக அதிகமான கதிர்வீச்சுத் தன்மை காணப்படுவதால் இதனால் ஏற்படும் அழிவு மிகவும் பயங்கரமானது.
2006ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வாழ்ந்த ரஷ்யாவின் உளவுத்துறையில் பணியாற்றிய அலெக்சாண்டர் லிட்வினென்கோ. 2006 இல் அவரைப் பார்ப்பதற்கு இவரது நண்பர்கள் இருவர் வருகிறார்கள்.
அந்த நண்பர்கள் இருவரும் சென்ற பின்னர் இவர் கடுமையான நோய்வாய்ப்படுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் திடீரென மரணமடைகிறார்.
இறுதியில் இது குறித்து ஒரு விசாரணை நடத்தப்பட்டது.பின்னர் அவருக்கு போலோனியம் 210 வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, இலங்கைக்கும் பொலோனியம் கொண்டு வரப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2020 ஜூன் மாதம் சுதந்திரச் சதுக்கத்திற்கு அருகில் ரஜீவ் ஜயவீர என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ரஜீவ் ஜயவீரவுக்கு பொலோனியம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு உடலைக் கொண்டு வந்து அங்கேயே வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டது.
ஏன் ரஜீவ் ஜயவீரவைக் கொலை செய்தார்கள்? அவரும் ஸ்ரீலங்கன் எயார் பஸ் (விமான) கொடுக்கல் வாங்கலில் முக்கிய சாட்சியாளராக இருந்தார். கபில சந்திரசேனவுக்கும் இந்த பொலோனியத்தைக் கொடுத்துத்தான் கொலை செய்துள்ளார்கள்.

சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையானது விசாரணை அதிகாரிகளுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்த பொலோனியம்-210 எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் விஷத்தின் ஆபத்தான தன்மை என்னவென்றால், ஒருவருக்கு இதய நோய் இருந்தால் அவர் மாரடைப்பால் இறந்தது போலவே தோன்றும்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர் பக்கவாதத்தால் இறந்தது போல் தோன்றும். நீரிழிவு இருந்தால் அவர் நீரிழிவு கோமா நிலையினால் இறந்தது போல் தோன்றும். இதுவே இதன் கொடூரமான தன்மையாகும். ஏனெனில் துப்பாக்கியால் சுட்டால் காயம் இருக்கும் சுட்டது தெரியும் மக்கள் பார்ப்பார்கள்.
ஆனால் இதில் மரணம் வெளியே தெரியாது என்பதால் துப்பாக்கியால் சுட்டுத்தான் இறந்தார் என்பதைக் காட்டுவதற்காகவே ரஜீவ் ஜயவீரவின் உடலை அங்கே கொண்டு வந்து போட்டுவிட்டு சுட்டுள்ளார்கள். ஆனால் உயிரோடு அல்ல, உயிரிழந்த ரஜீவ் ஜயவீரவின் சடலமே அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சம்பவமே கபிலவின் மரணத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: