News Just In

7/26/2021 09:23:00 AM

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..!!


திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த பெண்ணின் கணவர் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும், 7 வயதான குழந்தை மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெருகல் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பி வந்த முச்சக்கர வண்டியின் மீது காரொன்று கட்டுப்பாட்டை மீறி மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக சேருநுவர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments: