நேற்றைய தினம் 35 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படிகொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 273,031 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 244,437 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: