News Just In

7/12/2021 08:29:00 AM

மட்டக்களப்பில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பாகற்கொடிச்சேனை கிராமங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

கொரோனா தொற்று நோயினால் நாடு பூராகவும் பிரயாணத்தடை அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் வாழ்வாதாரங்களை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உட்பட வறுமை கோட்டின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் உதவி வழங்கும் நிகழ்வில் இராணுவத்தின் 4டபிள்யூ கெமுனு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்னல் ஜீ.ஆர்.ஆர்.எல்.ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

உலர் உணவு பொதிகளை பெற்று தருவதற்காக ஏ விஸன் நிறுவனம் பங்களிப்புகளை வழங்கியுள்ளதுள்ளதுடன், ஜெயந்தியா பிரதேச எம்.இப்ராகீம் மௌலவி மற்றும் மீரா விளையாட்டு கழக தலைவர் ஜ.எம்.றிஸ்வின், சிவில் பிரஜைகள் சபையின் உறுப்பினர்களும் பண உதவிகளை செய்து இவ்உலர் உணவு பொதிகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு உதவியதாக சிவில் பிரஜைகள் சபையின் பொதுச் செயலாளர் எச்.எம்.அன்வர் தெரிவித்தார்.









No comments: