News Just In

7/07/2021 08:25:00 PM

மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 04 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு...!!


காணொளி- https://youtu.be/WiiRgIFmHs8
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் சைனாபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை முதற்கட்டமாகா 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்றைய தினம் இரண்டாவது நாளாக கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி, நாவற்குடா மெதடிஸ் தேவாலயம், அரசடி பிள்ளையார் வித்தியாலயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் ஆகிய நான்கு நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதில் இன்று குறித்த பகுதியில் 1234பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் குறித்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையன உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தனர்.















No comments: