News Just In

7/02/2021 07:17:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் 04 மாவட்டங்களைச் சேர்ந்த 05 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...!!


நாட்டின் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறே, கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம்

கொழும்பு மாவட்டத்தின் நுகேகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேவகர் பிரிவின் பொல்ஹேன வீதி, லேக்வீவ் வீதி, முதலீட்டு சபை வீதி, (வாவி வீதி சந்திவரையான பகுதி) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறே அம்மாவட்டத்தின் மீகஹவத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபே கிராம சேவகர் பிரிவின் தேவாலய வீதி, ஆரியதாச விதானகே மாவத்தை, ஆரியதாச விதானகே மாவத்தையின் முடிவிடம், சியம்பலாபேவத்த கந்துபொட வீதி ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் மஹவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெமதஓய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


No comments: