News Just In

6/29/2021 09:52:00 AM

மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் முழு கிராமத்திற்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
Covid 19 காரணமாக தங்களது பொருளாதாரங்களை இழந்த மக்களுக்கு பிரதேச இளைஞர்களின் முயற்சியினால் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மாவடிச்சேனை கிராமத்தில் உள்ள சமுக மட்ட அமைப்புக்களின் கூட்டினைந்த முயற்சினால் மாவடிச்சேனை அணர்த்த நிவாரண குழு என்ற பெயரில் பிரதேசத்திரல் உள்ள பள்ளிவாயல்கள் விளையாட்டு கழகங்கள் சமுக மட்ட அமைபபுக்கள் ஒன்றினைந்து இவ் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மாவடிச்சேனை பிரதேசத்தில் உள்ள கூழி தொழிலாளர்கள் வியாபாரிகள் அரச உத்தியோகத்தர்கள் என்று அனைவருக்கமாக 1150 குடும்பங்களுக்கு 2100/= பொறுமதியான உலர் உணவு பொருட்கள் இருபத்திநாலு லட்சத்தி பதினையாயிரம் (2415000/=) ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.












No comments: