News Just In

6/10/2021 07:17:00 PM

நந்திக்கடலில் மீன் பிடிக்க சென்றவர் வயல் பகுதியில் சடலமாக மீட்பு...!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று(09) இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் இன்று(10) மாலை பச்சைப்புல்மோட்டை வயல்பகுதியில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனந்தபுரம் பகுதியினை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ்(44 வயது) என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பயணித்த குறித்த நபர் உந்துருளியுடன் உடலமாக காணப்பட்டுள்ளார்.

உடலம் பிரோத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன், இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments: