News Just In

6/05/2021 05:56:00 PM

கொரோனா தொற்றால் மட்பாண்ட விற்பனை முற்றாக வீழ்ச்சி- உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பு...!!


நவீன நாகரீ உலகில் மட்பாண்ட விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளமையால் ஏற்கனவே மண்பாண்ட உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் கொவிட் தொற்று காரணமாக மட்பாண்ட உற்பத்தியாளர்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூல பொருட்களால் உருவாக்கப்பட்ட பாண்டங்கள் சந்தையில் வர்த்தக இடம்பிடித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஆங்காங்கே மட்பாண்ட உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியையும் மேற்கொண்டே வருகின்றனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டுவரும் குடும்பங்கள் தற்புாது ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலயைில் தமது உற்பத்திகளை அதிகரிக்கவும், சந்தைப்படுத்தவும் முடியாமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

No comments: