News Just In

6/09/2021 04:39:00 PM

ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை!!


நாட்டிலுள்ள ஓய்வுபெற்ற தாதியர்களை தேவை ஏற்படின் ஒப்பந்த அடிப்படையின் கீழ் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே பிரதமர் இந்த ஆலோசனை வழங்கியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, தாதியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments: