News Just In

6/24/2021 03:18:00 PM

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு...!!


நாட்டில் தற்போதைய கொவிட் வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments: