News Just In

6/26/2021 01:04:00 PM

தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்த மகன்...!!


தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்த நபரின் மகன் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்த நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மகன்,இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: