News Just In

6/06/2021 04:41:00 PM

மட்டக்களப்பில் இன்று மூன்றாவது கொரோனா மரணம் பதிவாகியது...!!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா அலையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு,பயணியர் வீதியில் உள்ள வீடொன்றில் 84வயதுடைய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.இவரின் உடலம் அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவருடன் தொடர்புகளைப்பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இதுவரையில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 29.05.2021 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 27 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





No comments: