News Just In

6/30/2021 08:31:00 AM

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 45532பேர் கைது...!!


இலங்கையில் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 433 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் அதிகளவான கைதுகள் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

அங்கு 67 பேரும், கம்பளையில் 56 பேரும், குளியாபிட்டியவில் 43 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 45,532 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 3,200 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 59 வாகனங்கள் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி முயற்சித்தமைக்காக திருப்பி அனுப்பப்பட்டன.

No comments: