News Just In

6/29/2021 03:23:00 PM

அனுமதியில்லாமல் ஏறாவூரிலிருந்து கொழும்பு சென்ற பஸ் 31 பேருடன் தடுத்து வைக்கப்பட்டது என்று வெளியாகிய செய்தி தவறானது...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பயணத் தடைக் கட்டுப்பாட்டை மீறி அனுமதியில்லாமல் ஏறாவூரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் 31 பேருடன் தடுத்து வைக்கப்பட்டது என்று வெளியாகிய செய்தி தவறானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அந்த பஸ்ஸில் பயணித்த 31 பேரும் உரிய அனுமதிகளைப் பெற்றே சென்றார்கள் என்பதுடன் பொலிஸ் பரிசோதனையின்போது இது தெரியவந்ததையடுத்து பஸ்ஸில் பயணித்தவர்கள் அந்த பஸ்ஸிலேயே தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்று கொண்டிருந்தோரும் கொழும்பிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காகச் சென்று கொண்டிருந்தோரும் பயணித்த பஸ் செவ்வாய்க்கிழமை அதிகாலை 29.06.2021 கம்பஹா- மிரிஸ்வத்த சந்தியில் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அந்த பஸ்ஸிலிருந்த சாரதி நடத்துனர் உட்பட பஸ்ஸில் பயணித்த எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் பஸ் பொலிஸ் காவலில் எடுக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: