News Just In

6/26/2021 06:02:00 PM

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2900ஐக் கடந்தது...!!


இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் பதிவாகிய கொரோனா தொற்று உயிரிழப்புகள் படி உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 25 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


No comments: