News Just In

6/06/2021 12:49:00 PM

மட்டக்களப்பு- கொக்குவில் பகுதியில் 117பேருக்கு அன்டிஜன் பரிசோதனை- 7 வயது சிறுவன் உள்ளிட்ட 12பேருக்கு தொற்று உறுதி...!!


மட்டக்களப்பு- கொக்குவில் பிரதேசத்தில் இன்று காலை (2021.06.06) ஞாயிற்று கிழமை 117பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடைய 117 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் 38 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட 12பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றன.















No comments: