மேற்படி இடத்திற்கு சென்று ஆராதனையில் கலந்துக் கொண்டவர்களை வெல்லம்பிட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தினர்.
Zoom முறைமை ஊடாக ஆராதனை நடத்திய மதபோதகர் எச்சரிக்கப்பட்ட அதேவேளை, மேலதிக விசாரணைக்காக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முன்னிலையாகுமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன் அந்த பிரதேசத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த நபரொருவரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் அதனை பொருட்படுத்தாது வெளியில் சென்று வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்களின் இந்த செயலினால் தங்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments: