News Just In

5/17/2021 01:08:00 PM

பசளை வாங்குவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு...!!


கம்பளை நகரிலிருந்து இன்று (17) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை, உனம்புவ பகுதியிலிருந்து, பசளை வாங்குவதற்காக நகரத்துக்கு வந்த 50 வயது மதிக்கதக்க நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஆட்டோவிலிருந்து குறித்த நபர் இறங்கும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது, அவ்விடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே இவர் சடலமாக கிடந்துள்ளார்.

அவர் ஏதேனும் நோயால் வீதியில் விழுந்து மரணித்தாரா அல்லது எவ்வாறு உயிரிழந்தார் என்பது இன்னும் தெரியவரவில்லை. முகத்தில் சிறு காயங்கள் இருந்துள்ளன.எனவே, சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் உள்ளார் என தெரியவந்துள்ளது.

No comments: