News Just In

5/17/2021 02:26:00 PM

மட்டக்களப்பில் பொலிஸாரால் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம்...!!


மட்டக்களப்பில் நகர் பகுதிகளில் பொது மக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று 17.05.2021 காலை முதல் பொலிசார் அடையாள அட்டைப் பரிசோதனையினை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஒற்றை எண்னைக் கொண்ட நாட்களில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை இலக்கமாக கொண்டவர்களும், இரட்டை எண்னையுடைய நாட்களில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை இலக்கமாக கொண்டவர்களே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு வெளிச்செல்ல முடியும் என இதன்போது பொலிசார் அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





No comments: