நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் நாடுபூராவும் பயணத் தடையை அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பயணத் தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை ஆகிய பிரதேசங்கள் சனநடமாட்டமின்றி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, உள் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் நபர்களை கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.
No comments: