News Just In

5/15/2021 03:45:00 PM

மின் தடை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்...!!


இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1,50,000 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட சில அனர்த்தங்களினால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நேற்றும் (14) இன்றும் (15) சில பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வௌ்ளம் ஏற்பட்டுள்ளமையினால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.

No comments: