News Just In

5/27/2021 12:14:00 PM

மட்டக்களப்பில் நடைபெற்ற வொசாக் பூஜை வழிபாடு மற்றும் அலங்கார தோரண வொசாக் கூடு திறந்து வைப்பு...!!


வொசாக் தினத்தினை முன்னிட்டு புதன்கிழமை மாலை (26.05.2021) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 7.00 மணியளவில் மழைக்கு மத்தியிலும் வொசாக் தின வழிபாடுகள் நடைபெற்றதுடன் வெசாக் அலங்கார தோரண பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் விசேட பொலிஸ் அத்தியட்சகர் டி.சி.வேவிட்ட விதானகே, களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமின் அத்தியட்சகர் எச்.என்.என்.பிரேமரெத்ன, சிரேஸ்ட பொலிஸ் இன்பெக்ஸ்ரர் எம்.ஆர்.பத்திரன, உள்ளிட்ட பல பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.











No comments: