News Just In

5/19/2021 05:42:00 PM

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கடந்த 24 மணி நேரத்தில் 55 பேருக்கு தொற்று கண்டறிவு- பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர்!!


மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதனைத் தொடர்ந்து எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே 44 பேருக்கு கொரோனா தொற்று இனங்கானப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை கடந்த 10 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 55 பேருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: