News Just In

5/15/2021 08:10:00 PM

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் அன்டிஜன் பரிசோதனை 15 பேருக்கு கொரோனா உறுதி...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா சட்டத்தினை மீறி பயணம் செய்ய நூற்றி பதினெட்;டு பேருக்கு இன்று சனிக்கிழமை மேலெழுவாரியாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையிலும், நாட்டில்; பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மேலெழுவாரியாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்த வகையில் நாட்டில்; பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா சட்டத்தினை மதிக்காது மற்றும் முகக்கசவம் அணியாது வீதிகளில் பயணம் செய்தோர்களுக்கு மேலெழுவாரியாக நூற்றி பதினெட்;டு பேருக்கு அன்டிஜன் பரிசோதனை பெறப்பட்டது. நிலையில் பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில்; மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.















No comments: