News Just In

5/13/2021 04:50:00 PM

ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியருவதாவது,

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் வெளிமாவட்டம் ஒன்றின் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார்.

பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில் வீடு திரும்பிய அவர் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

அவருடன் சேர்த்து வீட்டாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (13.05.2021) காலை வெளியாகியுள்ளன.

குறித்த முடிவுகளின் அடிப்படையில் அந்தக் குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: