News Just In

4/02/2021 06:51:00 PM

குளத்தில் நீராட சென்ற நான்கு மாணவர்களில், ஒருவர் நீரில் மூழ்கி பலி!!


நுவரெலியா - ராகலை மந்திரி தென்ன குளத்தில் நீராட சென்ற நான்கு மாணவர்களில், ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனார்.

டியனில்ல பகுதியைச் சேர்ந்த15 வயதுடைய நான்கு மாணவர்கள், குறித்த குளத்தில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போது, ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏனைய மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: