News Just In

4/02/2021 05:30:00 PM

உலர் தேங்காயினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி...!!


நாட்டில் பாவனைக்கு உட்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் 30 வீதம் மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 1 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் பாவனைக்கு தேவையான 70 வீத தேங்காய் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் உலர் தேங்காயினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments: