News Just In

4/07/2021 04:51:00 PM

தெற்காசியாவில் சிறந்த சிறுவர் சிநேக மாநக திட்டத்தின் கீழ் லொயிட்ஸ் அவனியூவில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!!


தெற்காசியாவில் சிறந்த சிறுவர் சிநேக மாநகராக மட்டக்களப்பு மாநகரினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சிறுவர் பூங்கா அமைக்கும் செயற்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகர சபையால் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இதன் ஒருகட்டமாக லொயிட்ஸ் அவனியூவில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் மாநகர முதல்வர் சரவணபவன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் நோக்கில் சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓடுபாதை மற்றும் நடைபாதைக்கான கொங்கிறிட் இடும் வேலைத்திட்டம் மாநகர முதல்வர் முன்னிலையில் சிறுவர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுனிசெஃப் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் செரி நிறுவனம் இச் செயற்திட்டங்களை அமுல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments: