நுவரெலியாவில் இருந்து வெலிமடை நோக்கிய பயணித்த முச்சக்கரவண்டியொன்று லொறியொன்றுடன் மோதியதில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி காயமடைமந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 51 , 52 மற்றும் 20 வயதுடைய பெண்கள் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
இதேவேளை லொறியின் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மாஅ திபர் குறிப்பிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments: