News Just In

4/01/2021 05:11:00 PM

“மறக்க மறந்த மனிதம்” கவிதை நூல் வெளியீடு!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“மறக்க மறந்த மனிதம்” கவிதை நூல் வெளியீடு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலாபூஷணம் ஏறாவூர் தாஹிர் எழுதிய 101 கவிதைகள் உள்ளடங்கிய இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கவிதை நூலின் பொது விமர்சன உரையை செங்கதிரோன் சஞ்சிகையின் ஆசிரியர் ரீ.. கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தினார்.

இறுதியில் நூலின் பிரதிகள் அதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.









No comments: