News Just In

4/02/2021 04:36:00 PM

புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதி கருதி விசேட பேருந்து - தொடருந்து சேவைகள்!!


புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதி கருதி 21 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கவுள்ளதாக பதில் தொடருந்து பொது முகாமையாளர் டபிள்யூ. ஏ. டி. எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து நீண்ட தூர தொடருந்துகளும் வழமைப் போல சேவையில் ஈடுபடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை முதல் நீண்ட தூர பயணங்களுக்காக மேலும் 200 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க எமது செய்தி பிரிவினரிடம் தெரிவித்தார்.

No comments: