News Just In

4/29/2021 06:29:00 AM

பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!!


இலங்கையில் அனைத்து அரச பல்கலைக்கழங்களையும் எதிர்வரும் மே 10 அன்று மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழகங்களை மூட வேண்டியதன் விளைவாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதகங்களைக் குறைக்க விரிவுரைகள் மற்றும் வகுப்புகள் இணையத்தளமூடாக தொடரும்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மாணவர்கள் செப்டெம்பர் மாதத்தில் பல்கழைக்கங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக ஏப்ரல் 27 முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது, எனினும் நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 மூன்றாவது அலை சுகாதார நிலை காரணமாக பல்கலைக்கழங்களை குறித்த தனத்தில் திறக்க முடியாது போனது.

No comments: