News Just In

4/02/2021 07:46:00 PM

யோசப் பரராஜசிங்கம் மக்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு!!


யோசப் பரராஜசிங்கம் மக்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும், முதல் செயற்பாடும் அண்மையில் செல்லம் திரையரங்கில் நடைபெற்றுள்ளது.

"கல்வியால் உயர்ந்து காத்திரமான சமூகமாகி சவால்களை வெல்வோம்" எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது தலைமை உரையானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் நிகழ்த்தப்பட்டதுடன் நிகழ்வின் ஆரம்பம் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்த அதேவேளை இந்த நிகழ்விற்கு ஐபிசி தமிழ் இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments: