News Just In

4/05/2021 01:13:00 PM

முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- தந்தையும் மகனும் படு காயம்!!


திருகோணமலை - கண்டி வீதி, 4 ஆம் கட்டைப் பகுதியில், திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று (04) விபத்துக்குள்ளானது.

இதில் 2 சிறுவர்களோடு, தாயும் தகப்பனும் பயணித்ததாகவும் தகப்பனும் ஒரு பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த சீனக்குடா பொலிஸார், விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: