News Just In

4/26/2021 07:19:00 PM

லொறியில் மோதி 8 வயது பாடசாலை சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழப்பு!!


திருகோணமலை- கிண்ணியா காக்காமுனை பகுதியில் எல்ப் ரக லொறி ஒன்றில் மோதி பாடசாலை சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவம் இன்று (26) திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம் பெற்றதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா காக்காமுனை சம்புக்குளம் எனும் பகுதியைச் சேர்ந்த குதுபுல்லா பாத்திமா றிகா வயது (08) எனும் சிறுமியே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவர்.

இவர் இன்று காலை பிரத்தியோக வகுப்பு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது சடலம் கிண்ணியா தள வைத்திய சாலையில் வைக்கப்பட்டு மேலதிக பிரேர பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிண்ணியா பொலிஸாரால் லொறி சாரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments: