மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து சம்பவதினமான நேற்று இரவு நாற்கேணி, இருதயபுரம், ஊறணி ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து 2 கட்டு, 3 கட்டு கொண்ட ஹெரோயின்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: