News Just In

4/06/2021 07:00:00 PM

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது!!


கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தமையால் தடை செய்யப்பட்டிருந்த தனியார் வகுப்புக்களை மேல் மாகாணத்தில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில், மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்கள் ஜனவரி 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்ட போதும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தது

இதனை அடுத்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட்டது.

No comments: