அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு இறுதியாக பதிவான கொரோனா மரணங்களில் 18 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட 35, 40 மற்றும் 71 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண்ணொருவரும், பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண்ணொருவரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண்ணொருவரும் மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த 71பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை 931 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 99, 653 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 94 036 பேர் குணமடைந்துள்ளதோடு , 4848 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வத்தளை பகுதியில் அண்மையில் திருமணம் முடித்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கண்டி - பல்லேகல கிரிக்கெட் மைதான ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments: