News Just In

3/15/2021 09:13:00 AM

உயர் கல்விசார் கலந்தாய்வு பணிகள் (HECS ) அமைப்பின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!!


இலங்கை வாழ் படித்த இளைஞர், யுவதிகள் வெளிநாட்டில் உயர் கல்வியை பெறவும் தொழில் வாய்ப்பை தேடிக்கொள்ளுவதற்கான வழிகாட்டல் சேவையை "HECS" நிறுவனம் வழங்கவுள்ளது.

இவ் நிறுவனத்தின் அலுவலகமானது இல 300, பிரதான வீதி கல்லடி உப்போடை, நொச்சுமுனை, மட்டக்களப்பு என்னும் முகவரியில் இன்று (2021.03.15) திறந்து வைக்கப்பட்டது.

கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபகர் திரு.சி.தேவசிங்கன் அவர்கள் இவ்வலுவலகத்தை சுபவேளையில் திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண படித்த இளைஞர், யுவதிகள் சிறந்த பலனை பெற முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த சேவைகள் தொடர்பான மேலதிக விபரங்களை மேற்படி அலுவலத்திலோ அல்லது 0754306070 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது hecsbatticalo@gmail.com என்ற முகவரிக்கோ தொடர்பு கொண்டு பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.













No comments: