News Just In

3/12/2021 03:04:00 PM

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலங்கள் தொடர்பாக காணி காப்பு வங்கி முறையொன்றை வகுக்க திட்டம்!!


அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பயிர்ச்செய்கைக்கு உகந்த நிலங்கள் தொடர்பாக காணி காப்பு வங்கி முறையொன்றை வகுக்க வேண்டும் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயிர்ச்செய்கைக்கு உகந்த, இதுவரையிலும் பயிற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களை பாரம்பரிய விவசாயிகளிடம் வழங்க அல்லது பண்ணைகளை மேற்கொள்ள வழங்குவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தேசிய ஒருங்கிணைப்பு விவசாயத் துனணக் குழுவில் காணி வங்கியொன்று நிறுவுவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.

No comments: