News Just In

3/24/2021 07:07:00 AM

மட்டக்களப்பு மற்றும் அம்பாறைமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது!!


சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை வீச்சியை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments: