News Just In

3/17/2021 10:32:00 AM

மட்டக்களப்பு- தாழங்குடா பிறீமியர் லீக்- வாரியர்ஸ் அணி வெற்றியீட்டியது!!


(படங்கள்- சிவகுமார்)
தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகம் நடாத்திய 6 ஆவது தாழங்குடா பிறீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வுகள் 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை ஸீப்ரா விளையாட்டுக் கழக மைதானத்தில் கழகத் தலைவர் திரு நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிறீன் நைட்ஸ் மற்றும் தாழங்குடா வாரியர்ஸ் அணிகள் பங்குபற்றி தாழங்குடா வாரியர்ஸ் அணி வெற்றியீட்டியது.

போட்டிகளின் முடிவில் தொடர் ஆட்டநாயகன் விருது ஜெகன், சிறந்த பந்துவீச்சாளர் விருது யபிசன், தொடரின் அதிகூடிய 6 ஒட்டங்களை பெற்ற வீரர் ஜெகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர் பகீரதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இறுதிப்போட்டியில் பங்குபற்றிய இரு அணி வீரர்களும் பாராட்டி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த போட்டி நிகழ்வின் போது கௌரவ அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களும் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர் ச.மதிசுதன் அவர்களும், கழக அனுசரணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


















No comments: