News Just In

3/24/2021 11:21:00 AM

பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி!!


மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளின் 5,11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.

எனினும், மேல் மாகாணத்தின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம்திகதி ஆரம்பிப்பதென முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: