News Just In

3/24/2021 11:27:00 AM

சம்மாந்துறையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு இன்று!!


(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணத்தில் உருவான "சுபீட்சத்தின் நோக்கு" எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மூன்றாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத்தேர்வு செவ்வாய்க்கிழமை (23) பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம் வாஜித் அலியின் ஒருங்கிணைப்பில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நேர்முக தேர்வில் சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம்.பாரிஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கொண்டு நேர்முக தேர்வுகளை மேற்கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுத்து அக்குடும்பங்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாகவே இந் நேர்முக தேர்வுகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் "பல்நோக்கு அபிவிருத்தி பணி உதவியாளர்களாக" நியமனம் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.









No comments: