"SAFE- East" நிறுவனத் தலைவரும் மட்டக்களப்பு மாநகர முதல்வருமான கெளரவ தியாகராஜா சரவணபவான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து பயனாளிக்கு கையளித்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட இம் மனையை அமைக்க கனடாவில் வதியும் கல்லடி உப்போடையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் விமலநாதன் அவர்கள் முழு நிதியையும் HECS நிறுவனத்துக்கு வழங்கியதுடன் திரு.முருகதாஸ் சக்திரூபன் அவர்கள் இக்கட்டிடப்பணியை நிர்வகித்து அமைக்கும் செயற்பாடுகளை தொண்டு அடிப்படையில் மேற்கொண்டார் எனவும் "SAFE- East" அமைப்பின் செயலாளர் திரு.S.விபுலானந்தராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதேச ஆலய நிர்வாகிகளும், பிரதேச பொது மக்களும் கலந்து சிறப்பித்ததுடன், இச் சந்தர்ப்பத்தில் திரு.முருகதாஸ் சக்திரூபன் அவர்களுக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
No comments: